9, 10 , 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
9, 10 , 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - 10ஆம் வகுப்புக்கு தேர்வு நடத்திக்கொள்ள அனுமதி!
ஆல் பாஸ் உத்தரவு - ரத்து செய்ய மறுப்பு
9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு என நந்தகுமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கு முடித்துவைப்பு.
அதே போல் ஆல் பாஸ் உத்தரவு தொடர்பாக அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது ,11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் தங்களுக்கான குரூப்பை தேர்வு செய்வதற்கு தமிழக அரசு உரிய வழிகாட்டுதல் நெறிமுறையினை வெளியிட வேண்டும் எனவுப் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் சேர்க்கைக்கு தகுதியை கண்டறிய 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
0 Comments