Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

10th Tamil Unit 3 Long Answers

 10th Tamil Unit 3

 நெடுவினா Question & Answers

Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21,  Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil  10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide pdf free download 10th book back answer 10th standard  10th Tamil Unit 3  நெடுவினா Question & Answers 10th standard Tamil unit 3 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | 

 10th Tamil Unit 3  நெடுவினா Question & Answers

 10th Tamil Unit 3 Book back and Interior குறுவினா & சிறுவினா  Question & Answers, Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 3 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments,  assignments and to score high marks in board exams.  10th Tamil Unit 3  நெடுவினா Question & Answers

 10th Tamil Unit 3  நெடுவினா Question & Answers

10th Tamil Unit 3  நெடுவினா Question & Answers

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions 

10th tamil unit 3 Short answers
நெடுவினா Question & Answers
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Unit 3

விருந்து போற்றுதும்!


10th Tamil big questions நெடுவினா

1. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
முன்னுரை :
என்ற குறட்பா வந்த விருந்தினரைப் பேணிப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவனை வானவர்கள் போற்றும் சிறப்பு விருந்தினனாவான் என்கின்றது. வந்த விருந்தையும் வரும் விருந்தையும் சிறப்புடன் செய்வது இல்லத்தார் கடமையாகும்.
இனிது வரவேற்றல் :
வீட்டிற்குவந்த உறவினர்களிடம் வாருங்கள், அமருங்கள், நலமா? நீர் அருந்துங்கள், குடும்பத்தினர் அனைவரும் நலமா? என சில வார்த்தைகளைக் கூறி முகமலர்ச்சியுடன் விருந்தினரை வரவேற்றேன்.
 
உணவு உபசரிப்பு :
வீட்டிற்கு வந்த விருந்தினருக்கு அவர்கள் விரும்பும் அறுசுவை உணவைத் தயார் செய்து அவரை உணவு உண்ண வருமாறு இன்முகத்துடன் அழைத்து, அமர வைத்தேன்.
தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது மரபு. ஆகவே தமிழ்ப் பண்பாடு மறையாதிருக்க தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவிட்டேன்.
உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும், வலப்பக்கம் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்தேன்.
வாழை இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளை வைத்தேன்.
வாழை இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்தேன்.
உண்பவர் மனமறிந்து அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை மீண்டும் மீண்டும் பரிவுடன் பரிமாறினேன்.
அன்பு வெளிப்பாடு :
ஒரு குவளையில் நீரைக் கொண்டு வந்தேன். அதைக் கொண்டு அவர் அருகில் வைக்கப்பட்ட வெற்றுப்பாத்திரத்தில் அவர் கைகழுவுமாறு நீர் ஊற்றினேன்.
பிறகு கைகளைத் துடைப்பதற்குத் துண்டினை அளித்தேன்.
உணவு உண்டு எழுந்தவருக்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.
உணவுண்டவரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து, வீட்டில் உள்ள
உணவுப் பொருட்கள் சிலவற்றையும் கொடுத்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுக்குமாறு கூறி, ஏழடி வரை அவருடன் சென்று வழியனுப்பிவைத்தேன்.
முடிவுரை:
விருந்தினர் பேணுதல் தமிழர் மரபு ஆகும். அதனை அன்போடும் அருளோடும் செய்தல் நனிசிறப்பாகும்.

நெடுவினா

1. விருந்தோம்பல் பண்பாடு பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக. (அல்லது) விருந்து மற்றும் விருந்தோம்பல் பற்றித் தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
முன்னுரை :
விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
விருந்து போற்றும் திருக்குறள்:
திருவள்ளுவர் விருந்தோம்பல்’ என்ற ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார். இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கின்றார். முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை ‘மோப்பக்குழையும் அனிச்சம் ….’ என்ற குறளில் குறிப்பிடுகின்றார்.
தமிழர் மரபு ‘விருந்தோம்பல்’:
கோவலன் பிரிந்ததை விட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி கண்ணகி வருந்துகின்றாள் என்பது மூலம் விருந்து தமிழர் மரபு என்கிறார் இளங்கோவடிகள். கம்பரும் செயங்கொண்டாரும் விருந்தைத் தமிழர் மரபாகப் போற்றினர்.
விருந்தறம்:
அமிழ்தமே கிடைத்தாலும் தமிழர் தனித்து உண்ணமாட்டார் என்பதைப் புறநானூறு கூறுகின்றது. விருந்தினர் நடு இரவில் வந்தாலும் இன்முகத்துடன் தமிழர் வரவேற்பர் என்கிறது நற்றிணை. பழைய வாளும் யாழும் பணையம் வைத்து விருந்து போற்றப்பட்டதைப் புறநானூறு கூறுகிறது. “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்கிறார் ஔவையார். வாழை இலையில் விருந்து படைப்பதைத் தமிழர் அவசியமாகக் கொண்டிருந்தனர்.
முடிவுரை:
காலந்தோறும் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் உயர்பண்பாக விளங்கும் விருந்தோம்பலைப் போற்றிப் பெருமிதம் கொள்வோம்.
 
2. வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை – பசித்தவருக்கு உணவிடல் – இவை போன்ற செயல்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதை அழகுற விவரித்து எழுதுக.
முன்னுரை:
தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
வீட்டில் திண்ணை :
புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர். ஆனால் இன்று வீட்டுக்குத் திண்ணை வைத்துக் கட்டுவதுமில்லை அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதுவும் இல்லை . இருப்பினும் திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது.
விருந்தினரைப் பேணுதல்:
திருமணத்தை உறுதி செய்தல், திருமணம், வளைகாப்பு, பிறந்த நாள், புதுமனை புகுவிழா போன்றவற்றை இல்ல விழாக்களாகவே கொண்டாடினர். அப்போது மிகுதியான விருந்தினர்களை வரவேற்று உணவளித்து மகிழ்ந்தனர். அந்த இல்ல விழா நாட்களில் அப்பகுதி வாழ் மக்களும் வெளியூர் விருந்தினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்.
காலப் போக்கில் வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டன. பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பது முதல் பந்தியில் உபசரித்து வழியனுப்பும் வரை திருமண ஏற்பாட்டாளர்களே’ செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதைக் காண முடிகிறது.
தமிழர் பண்பாட்டில் ஈகை:
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.
‘பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே’
– கம்பராமாயணம், 1:2:36.
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.
இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை எனவே, அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்த பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரிய புராணத்தில் காட்டப்படுகிறது. வள்ளல்கள் பலரும் மிகுந்த ஈகைக்குணத்துடன் விளங்கியதை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது.
பசித்தவருக்கு உணவிடல்:
இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,
‘பலர்புகு நாவில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ!’
– என்ற குறுந்தொகை (118) அடிகள் புலப்படுத்துகின்றன.
மணிமேகலை பசிப்பிணியைப் போக்க மேற்கொண்ட முயற்சியிலும்’, இராமலிங்க அடிகள் ‘வடலூரில் அணையா அடுப்பை ஏற்படுத்தி பெரும் உதவி புரிந்தமை’ இன்னும் தொடர்வதை பசிப்பிணியை நீக்குவதற்கான செயல்களில் முதன்மையானதாகக் குறிப்பிடலாம். இன்றைய நிலையில் பல்வேறு திருக்கோயில்களில் அன்னதானம் வழங்குவதைத் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
விருந்தினர் அன்றும் இன்றும்:
சங்க காலத்திலிருந்தே அரசராயினும் வறியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர். கால மாற்றத்தில் புதியவர்களாகிய விருந்தினர்களை வீட்டுக்குள் அழைத்து உணவிடுவது குறைந்தது. விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின. நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காகக் கட்டப்பட்டன.
 புதியவர்களான விருந்தினர்களை ஏற்பது குறைந்துவிட்ட காலத்தில், ஓரளவு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாக ஏற்றனர். படிப்படியாக உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாகப் போற்றும் நிலைக்கு மாறினர்.
நிறைவுரை:
பண்டைத்தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல்பண்பாடு செழித்திருந்தது. அந்த உயரிய தமிழ்ப் பண்பாடு இன்றைய தமிழர்களிடம் பல்வேறு முறைகளில் பின்பற்றப்படுகிறது. காலந்தோறும் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் உயர்பண்பான விருந்தோம்பலைப் போற்றிப் பெருமிதம் கொள்வோம்.


கோபல்லபுரத்து மக்கள்

நெடுவினா

1. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
முன்னுரை :
கோபல்லபுரத்து மக்கள் என்ற கதை சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதியது. அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை இக்கதையில் காண்போம்.
அன்னமய்யாவுடன் வந்த வாலிபன் :
சுப்பையாவுடன் புஞ்சையில் அன்று அருகு எடுக்கும் வேலை. அன்னமய்யா வேலைக்கு ஒரு ஆளை அழைத்து வந்தார். அன்னமய்யாவுடன் வந்தது சன்யாசியோ, பரதேசியோ இல்லை. கிட்டே போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன். வாலிபனது தாடியும், அழுக்கு ஆடையும், தள்ளாட்டமும் அவனை வயோதிபனைப் போலவும் சாமியாரைப் போலவும் காட்டியது. ந
ீச்சுத் தண்ணீ ர் :
அன்னமய்யாவைப் பார்த்த அவ்வாலிபன், குடிக்கத் தண்ணி கிடைக்குமா? எனக் கேட்டான். அதற்கு அன்னமய்யா நீச்சுத் தண்ணீ தரவா? எனக் கேட்டான். கரிசல் மண்ணில் பாதி புதைக்கப்பட்டு இருந்த கரிய மண் பாத்திரத்தின் வாய் கற்களால் மூடப்பட்டிருந்தது. அன்னமய்யா மண்பாத்திரத்தின் மேலிருந்த கல்லை அகற்றினான்.
ஜீவ ஊற்று :
அன்னமய்யா கலசத்திலிருந்து கஞ்சின் நீத்துப்பாகத்தைச் சிரட்டையில் ஊற்றிக் கொடுத்தான். நீத்துப் பாகமாகிய மேல் கஞ்சை வாலிபன் குடித்ததும் கலயத்தை அலசி தெளிவு மறைந்த சோற்றின் மகுளி கஞ்சையும் வாலிபனுக்கு ஊற்றிக் கொடுத்தான் அன்னமய்யா.வாலிபனுக்குள் ஜீவ ஊற்று பொங்கியது. அவன் உற்சாகம் அடைந்தான்.
அன்னமய்யாவின் மனநிறைவு :
கஞ்சியைக் குடித்த வாலிபன் வேப்ப மர நிழலைச் சொர்க்கமாய் நினைத்துத் தூங்கினான். இதைக்கண்ட அன்னமய்யாவுக்கும் மனநிறைவு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்து அப்படியே தூங்கிவிடும் குழந்தையைப் போலவே அவ்வாலிபனையும் பார்த்தான்.
பெயர் பொருத்தம் :
தூக்கம் தெளிந்து எழுந்த வாலிபன் “உன் பெயர் என்ன?” என்று அன்னமய்யாவிடம் கேட்டான். அதற்கு அவன் அன்னமய்யா என்றான். எவ்வளவு பொருத்தம். ‘எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான்’ என் வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது என்று மனதுக்குள் கூறினான் அவ்வாலிபன்.
பரமேஸ்வரன் (மணி) :
அன்னமய்யா அந்த வாலிபனின் பெயரைக் கேட்டார். அவன் தன் பெயர் பரமேஸ்வரன் என்றும் தற்போதைய பெயர் மணி என்றும் சொன்னான். கம்மஞ்சோறும் துவையலும் கொடுத்தார்கள். பசியால் அதையும் உண்டு உறங்கினான்.
முடிவுரை :
அன்னமய்யா என்ற பெயருக்கு ஏற்ப அன்னமிட்டு மனிதநேயம் காத்த அன்னமய்யாவின் பெயர் அவனுக்கே பொருத்தமுடையதாக அமைகிறது. கம்மஞ்சோறும், துவையலும் கரிசல் மண்ணுடன் மணக்கின்றது.
தொகாநிலைத் தொடர்கள்

கடிதம் எழுதுக.
உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம்

அனுப்புநர்
கண்ணன்,
25, வள்ளல் தெரு,
அண்ணாநகர்,
திருநெல்வேலி – 11.

பெறுநர்
உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
உணவு பாதுகாப்பு ஆணையம், திருநெல்வேலி.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுதல் – தொடர்பாக.
 
வணக்கம்.
இன்று காலை பேருந்துநிலையத்திற்கு வெளியில் உள்ள “சுவையகம்” என்ற உணவகத்திற்குச் சென்றோம். நானும் என் நண்பனும் உணவு உண்டோம். உணவில் கல்லும், குழம்பில் பூச்சியும் கிடந்தது. உணவக மேலாளரிடம் முறையிட்டோம். அதற்குச் சரியான காரணத்தை அவர் அளிக்கவில்லை. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு விலைப்பட்டியல் பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்த தொகையை வாங்காமல் கூடுதலாக இருபது ரூபாயைக் காசாளர் வாங்கினார்.
எனவே, தரமற்ற உணவையும், விலை கூடுதலாகவும் விற்பனை செய்த, அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதற்கான தக்க சான்றுகள் (புகைப்படம்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
நன்றி!
திருநெல்வேலி.
23.03.2020.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
கண்ணன்.
உறைமேல் முகவரி:
 
-----------------------------
-----------------------------
-----------------------------
-----------------------------



நயம் பாராட்டுக.
“கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்”. – காளமேகப் புலவர்
 
திரண்ட கருத்து :
வாழைக்கு அழகு குருத்து
செய்யுளுக்கு அழகு திரண்ட கருத்து
கடல் சூழ்ந்த ஊர் நாகப்பட்டினம். அங்குள்ள காத்தான் சத்திரத்தில் பொழுது இறங்கும் போதுதான் அரிசி வரும். அதனைத் தீட்டி உலையில் போடும்போது ஊரே அடங்கிப் போயிருக்கும். ஓர் அகப்பைச் சோறு இலையில் போடும்போது விடிவெள்ளி முளைத்துவிடும்.
தொடை நயம் :
தொடையற்ற பாட்டு
நடையற்றுப் போகும்
செய்யுளில் எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகிய உறுப்புகளால் தொடுக்கப்படுவது தொடை.
மோனை நயம் :
மோனையற்ற பாட்டு
சேனையற்ற நாடு
செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும்.
 சான்று:
கத்துகடல், காத்தான்
உலையிலிட, ஊரடங்கும்
அத்தமிக்கும், அரிசி வரும்
எதுகை நயம் :
வீரத்துக்கு அழகு வேங்கை
பாட்டுக்கு அழகு எதுகை
அடிதோறும் அல்லது சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.
சீர் எதுகை:
கத்துகடல், காத்தான், சத்திரத்தில்; அத்தமிக்கும், குத்தி
அடி எதுகை:
 
அணி நயம் :
கோவிலுக்கு மணி அழகு
செய்யுளுக்கு அணி அழகு
இப்பாடல் இரு பொருள்பட வந்து இரட்டுற மொழிதல் அணியால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
பா நயம் :
இப்பாடல் நேரிசை வெண்பா வகையைச் சார்ந்தது.
தலைப்பு :
‘நாகை சத்திரம்’ என்பது இப்பாடலுக்குப் பொருத்தமான தலைப்பு.
 
மொழியோடு விளையாடு
விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடி.
இ – கு (பறவையிடம் இருப்பது)
கு – தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)
வா –  (மன்னரிடம் இருப்பது)
அ – கா (தங்கைக்கு மூத்தவள்)
ம –  (அறிவின் மறு பெயர்)
பட – (நீரில் செல்வது படகு)
Answer:
இறகு (பறவையிடம் இருப்பது)
குருதி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)
வாள் (மன்னரிடம் இருப்பது)
அக்கா (தங்கைக்கு மூத்தவள்)
மதி (அறிவின் மறு பெயர்)
படகு (நீரில் செல்வது படகு)
திருக்குறள்
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
சிலை – சீலை, தொடு – தோடு, மடு – மாடு, மலை – மாலை, வளி – வாளி, விடு – வீடு
 
சிலை – சீலை : எ.கா: சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருந்தனர்.
தொடு – தோடு : காதைத் தொடும்போது தோடு அழகாக ஆடியது.
மடு – மாடு : மடுவில் (குட்டையில்) மாடு நீர்க் குடித்தது.
மலை – மாலை : மலை மீது ஏறி மாலையில் விளையாடினேன்.
வளி – வாளி : வளியும் (காற்றும்) வாளியும் (அன்பும்) இல்லாமல் வாழ முடியாது.
விடு – வீடு : அகந்தையை விடு, வீடுபேறு (சொர்க்கம்) கிடைக்கும்.
திருக்குறள்


Post a Comment

0 Comments