Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

10th Tamil ONE MARK QUESTION & ANSWERS

10 TH STD ONE MARK 

QUESTION &  ANSWERS

10 ஆம் வகுப்பு  ஒரு மதிப்பெண் வினாக்கள் - புத்தக வினாக்கள் தொகுப்பு | 5 Minute Maths

பலவுள் தெரிக .    

இயல் 1

1 . ' மெத்த வணிகலன் '  என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது

அ )  வணிகக் கப்பல்களும் ஐம்பெரும்  காப்பியங்களும்

2.  ' காய்ந்த இலையும்  காய்ந்த தோகையும்  '  நிலத்துக்கு நல்ல உரங்கள் . இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது .
ஈ )  சருகும் சண்டும்

3. எந்தமிழ்நா என்பதை பிரித்தால் எவ்வாறு வரும் .
இ ) எம் + தமிழ்  + நா

4. '  கேட்டவர் மகிழுப் பாடிய பாடல் இது ' -  இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற் பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே -
ஈ )  பாடல் கேட்டவர்

5.  வேர்க்கடலை ,  மிளகாய் விதை ,  மாங்கொட்டை  ஆகியவற்றைக்  குறிக்கும் பயிர் வகை
ஆ ) மணிவகை


இயல்  -2


6. '  உனக்கு பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்  ' -  பாரதியின்  இவ்வடிகளில்  இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை ?
ஆ )  மோனை ,  எதுகை

7. செய்தி : 1 -  ஒவ்வோர் ஆண்டும் ஜூன் - 15 ஐ உலகக் காற்று நாளாக கொண்டாடி வருகிறோம் .
செய்தி : 2 -  காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பது எனக்கு பெருமையே .
செய்தி : 3 -  காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக்  கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள் .

ஈ ) செய்தி 1 , 3  ஆகியன சரி

8 .  " பாடுஇமிழ் பனிக் கடல் பருகி " என்னும்  முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது ?
அ)  கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

9. 'பெரிய மீசை '  சிரித்தார்- வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது ?
இ )  அன்மொழித்தொகை

10. பொருந்தும் விடை வரிசையை தேர்ந்தெடுக்க ,
ஆ) 3 , 1 , 4 , 2

பொருத்தமானவை :
அ )  கொண்டல் -  கிழக்கு
ஆ)  கோடை -  மேற்கு
இ)  வாடை -  வடக்கு
ஈ )  தென்றல் -  தெற்கு


இயல் - 3


11. பின்வருவனவற்றுள் முறையான தொடர் - 
இ)  தமிழர் பண்பாட்டின்  வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு .

12. "  சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி "  என்னும் அடியில் பாக்கம் என்பது - 
ஈ )   சிற்றூர்

13. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்த காரணமாக அமைவது _____
அ)  வேற்றுமை உருபு

14 .  காசிக்காண்டம் என்பது - 
இ ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

15 . விருந்தினரைப்  பேணுவதற்குப்  பொருள் தேவைப்பட்டதால் ,  கருங்கோட்டுச்  சீரியாழைப்  பணயம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு  . இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை
ஆ )  இன்மையிலும் விருந்து


இயல் - 4


16.  உனதருளே  பார்ப்பன் அடியேனே -  யார் கூறியது ?
ஆ)  இறைவனிடம் குலசேகராழ்வார்

17. தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க .
தலைப்பு :  செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள் :  கண்காணிப்பு கருவி ,  அசைவு நிகழும்  பக்கம்  தன் பார்வையைத் தமிழ் படம் திருப்புகிறது . திறன்பேசியில்  உள்ள வரைபடம்  போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது .
அ)  தலைப்புக்கு பொருத்தமான  குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

18 .பரிபாடல் அடியில் '  விசும்பும் இசையும் '  என்னும் தொடர் எதனை குறிக்கிறது ?
ஈ)  வானத்தையும் பேரொலியையும்

19 . குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டு அம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார் . பூனையார் பால் சோற்றைக் கண்டதும்  வருகிறார் .ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள  வழுவமைதி முறையே....
இ )  பால் வழுவமைதி ,   திணை வழுவமைதி

20. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது ?
ஈ)  இலா



இயல் -5


21. ' மாபாரதம்  தமிழ்ப்படுத்தும்  மதுராபுரி சங்கம்  வைத்தும் '  என்னும் சின்னமனூர்ச் செப்பேடுக் குறிப்பு உணர்த்தும் செய்தி 
அ ) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது .

22.  அருந்துணை என்பதைப் பிரித்தால் __________
அ )  அருமை +  துணை

23. " இங்கு நகரப் பேருந்து நிற்குமா ?  என்று வழிப்போக்கர் கேட்பது  ______ வினா. "  அதோ ,   அங்கே நிற்கும் "  என்று  மற்றொருவர் கூறியது ____ விடை .
இ)   அறியா வினா,  சுட்டு விடை

24 ." அருளைப் பெருக்கி அறிவை திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை "
-  என்று இவ்வடிகளில்  குறிப்பிடப்படுவது எது ?
இ)  கல்வி

25 . இடைக்காடனாரின்  பாடலை  இகழ்ந்தவர்______ இடைக்காடனாரிடம்  அன்பு வைத்தவர் ______
ஈ)  மன்னன் , இறைவன்


இயல் - 6


26.  குளிர் காலத்தைப் பொழுதாக கொண்ட நிலங்கள் _______
இ)  குறிஞ்சி ,  மருதம் , நெய்தல்

27. ஒயிலாட்டத்தில்  இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர் . இத்தொடரின்  செயப்பாட்டு வினைத் தொடர் எது ?
இ )  ஒயிலாட்டம் ,  இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது .

28 . மலர்கள் தரையில் நழுவும் - எப்போது ?
ஆ)  தளரப் பிணைத்தால்

29 . கரகாட்டத்தைக்  கும்பாட்டம் என்றும்  குடக்கூத்து என்றும்  கூறுவர் . இத்தொடருக்கான வினா எது ?
ஈ )  கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?

30.  கோசல நாட்டில் கோடை இல்லாத காரணம் என்ன ?
ஈ)  அங்கு வறுமை இல்லாததால்


இயல் -7


31.  சரியான அகர வரிசையை தேர்ந்தெடுக்க .
இ)  உழவு ,  ஏர் ,  மண் ,  மாடு

32. ' மாலவன் குன்றம் போனாலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ' மாலவன் குன்றம் வேலவன் குன்றமும் முறையே ..
அ)  திருப்பதியும் திருத்தணியும்

33. " தன் நாட்டு மக்களுக்குத்  தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் "  என்னும் மெய்க்கீர்த்தித்  தொடர் உணர்த்தும் பொருள் ...
ஈ)  நெறியோடு நின்று காவல் காப்பவர்

34. இரு நாட்டு அரசர்களும்   தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்______
இ)  வலிமையை நிலைநாட்டல்

35.  தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி.  கருதியது_____
ஈ)  சிலப்பதிகாரம்



இயல் -8 


36. மேன்மை தரும் அறம் என்பது ____
அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது .

37.  " வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் " இவ்வடி குறிப்பிடுவது______
இ )  இடையறாத அறப்பணி செய்தல்

38.   உலகமே வறுமையுற்றாலும்  கொடுப்பவன் என்றும்  பொருள்களின் இருப்பைக் கூட  அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்ட படுவோர் ..
ஆ)  அதியன் ,  பெருஞ்சாத்தன்

39. காலக்கணிதம்  கவிதையில் இடம் பெற்ற  தொடர் _____
அ)  இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது .

40 . சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்துள்ள பாவினம் ______
அ)  அகவற்பா



இயல் - 9


41 ."  இவள் தலையில்  எழுதியதோ  கற்காலம் தான் எப்போதும் " __ இவ்வடிகளில் கற்காலம் என்பது
ஈ)  தலையில் கல் சுமப்பது

42 . சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக  ஜெயகாந்தன் கருதுவது
ஆ)  பெற்ற சுதந்திரத்தைப்  பேணிக் காத்தல்


43. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ____________  வேண்டினார்
அ)  கருணையன் எலிசபெத்துக்காக

44.  வாய்மையே மழை நீராகி __ இத்தொடரில் வெளிப்படும் அணி .
இ)  உருவகம்

45 . கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும்  இருந்து எழுதுகிறேன் _  இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது
ஆ )  சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்





Post a Comment

0 Comments