Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

12th Tamil Memory poem Unit 5 to 8

பன்னிரண்டாம் வகுப்பு 

தமிழ் மனப்பாட செய்யுள் 

இயல் 5 to 8

இயல் – 5                         தெய்வமணிமாலை

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவுகல வாமை வேண்டும்

பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்

பிடியா திருக்க வேண்டும்

பாவகை : பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

                                                                                - இராமலிங்க அடிகள்

 இயல் – 6         சிலப்பதிகாரம்

குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்

தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்

பின்வழி நின்றது முழவே, முழவொடு

கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை

பாவகை : ஆசிரியப்பா

                              - இளங்கோவடிகள்

 இயல்-7                            புறநானூறு

காய்நெல் அறுத்துக் களம் கொளினே

மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்

நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே

வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்

பாவகை : நேரிசை ஆசிரியப்பா

                                                                - பிசிராந்தையார்

இயல்-8           இரட்சணிய யாத்திரிகம்

              இறைமகனின் எளிய நிலை

2. பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி

ஏதமில் கருணைப் பொன்மான இருதயத்து ஊன்ற ஊன்ற

வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால்

நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலா கரும் நோக்கி.

பாவகை : அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

                - ஹெச் கிருட்டிணனார்

 

சிறுபாணாற்றுப்படை
இவர்களோடு நல்லியக்கோடன்

 ……………………..என ஆங்கு

எழுசமங் கடந்த எழு உறழ் திணிதோள்

எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம்

விரிகடல் வேலி வியலகம் விளங்க

ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்.

பாவகை : நேரிசை ஆசிரியப்பா

-நல்லூர் நத்தத்தனார்


************************

பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் மனப்பாட செய்யுள் இயல் 1 to 4 Click Here 

பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் மனப்பாட செய்யுள் இயல் 5 to 8 Click Here 

************************


Post a Comment

0 Comments